search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடக்கழிவு மேலாண்மை திட்டம்"

    • திட க்கழிவு மேலாண்மை திட்ட த்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
    • ஊராட்சியிலும் செயல்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    ஈரோடு:

    உள்ளாட்சி அமைப்பு களில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடியிரு ப்பு பகுதிகளில் சேகரமாகும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரித்தல் மற்றும் மக்காத குப்பைகளை சிமெண்ட் தயாரிக்கவும், சாலைகள் அமைக்கவும் பயன் படுத்தப்பட்டு வருகின்றது.

    ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் சேரமாகும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கப் பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

    ஆனால் கிராம ஊராட்சி களில் உள்ள குடியிருப்பு களில் சேகரமாகும் குப்பை கள் பெரும்பாலும் சாலை யோரங்களில் கொட்டி தீ வைக்கப் படுவதாகவும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார் இருந்து வருகின்றது.

    நகர்புற உள்ளாட்சிகளை போல மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என முறையாக தரம் பிரித்து மறுசுழற்சி செய்து குப்பைகளை பயனுள்ளதாக மாற்றும் அளவுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கிராம ஊராட்சி களில் இ ல்லாததால் மக்காத குப்பை களை தீ வைத்து எரிக்கப்ப டுவதாக கூறப்படுகின்றது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் திடக்கழிவு மேலா ண்மை திட்டத்தை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சி களிலும் மேம்படுத்த கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா உத்தர விட்டுள்ளார்.

    இது குறித்து ஊராட்சிகளி ன் உதவி இயக்குநர் சூர்யா கூறியதாவது:-

    கிராம ஊராட்சிகளில் குடியிருப்பு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் அந்தந்த ஊராட்சிகளில் உள்ள உரக்கிடங்கிலும், மக்காத குப்பைகள் அந்தந்த ஊரா ட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிடங்கு களிலும் சேகரிக்கப்ப ட்டு பின்னர் சிமெண்ட் தயாரிப்பு நிறுவன ங்களுக்கு அனுப்பபடுகி ன்றது.

    ஒரு சில பகுதிகளில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதாகவும் புகார் உள்ளது. எனவே கிராம ஊராட்சிகளில் திட க்கழிவு மேலாண்மை திட்ட த்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதிய திட்டத்தை ஒவ்வொரு ஊராட்சியிலும் செயல்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுமார் 50-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.
    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூச்சு திணறல், சுவாச கோளாறு, கொசு தொல்லை மற்றும் சுகாதார சீர்கேடு பாதிப்பு ஏற்படும்.

    செங்கல்பட்டு:

    காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் பெருமாட்டுநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பாண்டூர் கிராமத்தில் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதற்கான இடத்தை தேர்வு செய்து ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    இதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனை வலியுறுத்தி கிராமசபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில் பெரு மாட்டுநல்லூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் குடியிருக்கும் பாண்டூர் கிராமத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமைக்க கூடாது. இது அமைந்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூச்சு திணறல், சுவாச கோளாறு, கொசு தொல்லை மற்றும் சுகாதார சீர்கேடு பாதிப்பு ஏற்படும்.

    இப்பகுதியில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் அஸ்தினாபுரம் ஏரியும், 20மீட்டர் தூரத்தில் குழந்தைகள் காப்பகம் மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ளன.

    எனவே பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகத்திற்கு நில உரிமை மாற்றம் செய்யக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×